Wednesday, September 17, 2008

லீனா மணிமேகலையின் தேவதைகள்

ஆவணப்படம் குறித்து.....


லீனா மணிமேகலையின் தேவதைகள் ஆவணப்படம் (என் டி டிவி 24x7 டாக்குமெண்டரி)பார்த்தேன். மூன்று பெண்களின் வாழ்க்கையையும் அவர்கள் அதை எதிர்கொள்ளும் கணங்களையும் ஆவணப்படுத்தியிருப்பது மிகுந்த பாதிப்பை உண்டாக்கும் விதமாக இருக்கிறது.

இந்த ஆவணப்படம், ஆவணப்படம் என்பதையும் தாண்டி பரிமாணங்கள் பெற்று ஒரு கவிதையாக, வேதனைகளை ஏற்றுக்கொண்ட அந்தப் பெண்களின் மனநிலையைச் சொல்கிறது.

வாழ்வின் கோர பக்கங்களின் சிதைவுக்குள்ளானவர்கள் எப்படி தங்களைச் சுற்றியவர்களுடனும் அற்ப ஜீவன்களிடமும் பேரன்பு பாராட்டுபவர்களாக இருக்கிறார்கள்?

ஆம் இது தேவதைகளால் மட்டுமே சாத்தியம்.

லீனாவிற்கு எனது பாராட்டுகள்.

No comments:

Post a Comment

புத்தம் புது ஆண்டு...

  காலம்தோரும் ஓர் இரட்டை நிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அம்மாவும் நானும் எம் ஜி ஆர் சிவாஜி என்று மல்லுக்கு நின்றிருந்தபோது நானும் துரைய...